Saturday, April 17, 2010

காமெடியன்கள வெச்சு காமெடி-ஜோக்ஸ்

அட காமெடி பண்றவங்க சீரியஸா அடிச்சிகறாங்க அபப இவங்கள வெச்சு நம்ம காமெடி பண்ணவேண்டியதுதான் ..... எப்படி லாஜிக் ....

(பி.கு: நம் சேட்டை கமெண்ட் இவர்களை பார்த்து : " என்ன இது சின்ன புள்ள
தனமா இருக்கு ")

1 . " ஜட்ஜ் ஐயா இங்க இருக்கற புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும் தொடர்ந்து பயங்கரமா சண்டை போட்டுகிட்டே இருக்காங்க"
"அட ஏன்யா சுத்தி வளைக்கர வடிவேலு சிங்கமுத்து மாதிரின்னு சொல்லு!.... சரி அப்ப பிரிச்சிட வேண்டியதுதான்"

2 "ஏன்யா பல கோடி ரூபாய்
நில மோசடிங்கரையே அப்படி எந்த நிலத்த ஏமாத்தி உன்கிட்ட வித்தார் ""வடமா'நிலத்த'"

3 . "அண்ணே வடிவேலு-சிங்கமுத்து செந்தில்-கவுண்டமணி ரெண்டு ஜோடிக்கும் உள்ள வித்யாசம் என்ன?
"செந்தில்-கவுண்டமணி - ரெகார்டட் கிரிக்கெட் மேட்ச்வடிவேலு-சிங்கமுத்து -லைவ் கிரிக்கெட் மேட்ச் "

4 . "டேய் வாடா போலிஸ் திருடன் விளையாட்டு விளையாடலாம் "
" போடா அது பழசு வா வடிவேலு-சிங்கமுத்து விளையாட்டு விளையாடலாம்"

5 . "ஏன்யா திருவிழால எப்பவும் வர கோழி சண்டை, ஆடு சண்டைலாம் போரடிக்குது இந்த தடவை வடிவேலு-சிங்கமுத்துவ கூப்பிடலாம்னு நீ சொல்றது கொஞ்சம் ஓவரா இல்ல "

6 . "ஏன்டா அண்ணன் தம்பி ரெண்டு பெரும் இப்படி கீரியும் பாம்புமா அடிச்சிகரீங்களே உங்க வீட்ல கேக்கவே மாட்டாங்களா"
"நாங்க பரவா இல்லை சார் எங்க அம்மா அப்பா வடிவேலு-சிங்கமுத்து மாதிரி அடிச்சிப்பாங்க"

இதை முடிக்கும் பொழுது என் மனதில் தோன்றிய வசனம் .வடிவேலு: " எங்கள வெச்சு காமடி கீமடி பண்ணலியே "

0 comments:

Post a Comment