Saturday, April 10, 2010

சம்மர் ஸ்பெஷல்-1 (சூடான ஜோக்ஸ்)


அட வெயில் ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு இதபத்தி சீரியஸா நெறையா பேசியாச்சு இன்னும் என்னத்த சொல்றது.... சரி ....
ஆரம்பிப்போம் நம் சேட்டையை ...."
பி. கு : ஜோக்ஸ படிச்சிட்டு எனக்கு நானே சொல்லி கொண்டது "வெயில் ஜாஸ்தியான இப்படிதான்"

1 ஏன் அண்ணே இப்படி வெளில சுத்துறீங்க .... வெயில் எப்படி அடிக்குதுன்னு பாருங்க "
"அடபோப்பா இது கொஞ்ச நேரம் தான் அடிக்கும் வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொடர்ந்து அடிக்கும்"

2 . "என்னப்பா டீ இவ்வளவு ஆறி பொய் இருக்கு "
" கொஞ்ச நேரம் கைல வெச்சுக்குங்க அதுவே சூடாகிடும்"

3 "பசங்களா கேளுங்க எந்த உணவையுமே காச்சி சூடா வெச்சாத்தான் பேக்டீரியா தங்காது "
" போங்க டீச்சர் அப்படி பார்த்த பூமியே பயங்கர சூடா இருக்கு எல்லா பேக்டிரியாவும் இந்நேரத்துக்கு செத்திருக்கனுமே

4 . "சர்வர் சூடா என்னையா இருக்கு "
"பூமி தான்

5 . "தம்பி, இராமாயணம் இந்த காலத்துல நடந்திருந்தா எப்படி இருந்திருக்கும்"
"ராமர் சீதாவ அக்னி குண்டதுல நடந்துவர சொல்றதுக்கு பதிலா வெயிலில நடந்து வர சொல்லிருப்பார் "

6 "தலைவரே வெயில கொடுமை தாங்க முடியலைதான் அதுக்காக தினமும் ஒரு பிரபலத்த கூப்பிட்டு உங்கள புகழ சொல்லி உச்சி குளிர்றது கொஞ்சம் டூ மச் "

7 "டாக்டர் நீங்க என் புருஷன்கிட்டே வேயில் காலமா இருக்கு நெறைய நீர் ஆகாரமா சாப்பிடுங்கன்னு சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டு உயிரை எடுக்கறாரு "
"ஏன் மா என்ன ஆச்சு
" நீருக்கு சாராயமும் ஆகாரத்துக்கு சைடுடிஷும் கேக்கறாரு

8 . "டேய் மொட்டை மாடில தண்ணி ஊத்துடா கூலா இருக்கும் "
"அடபோங்கப்பா அப்ப பூமி மேல தண்ணி ஊத்த சொல்லுங்க உலகமே கூலா இருக்கும்"
"?!!!?"

4 comments:

Jackiesekar said...

2 . "என்னப்பா டீ இவ்வளவு ஆறி பொய் இருக்கு "
" கொஞ்ச நேரம் கைல வெச்சுக்குங்க அதுவே சூடாகிடும்"==//

முடியலை அழுதிடுவேன்... சொல்லிட்டேன்..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

குறும்பு.....

வாழ்த்துக்கள்!

Aba said...

கலக்கல்.......

Rajan said...

முடியலை அழுதிடுவேன்... சொல்லிட்டேன்..

Post a Comment