Saturday, April 17, 2010

காமெடியன்கள வெச்சு காமெடி-ஜோக்ஸ்

அட காமெடி பண்றவங்க சீரியஸா அடிச்சிகறாங்க அபப இவங்கள வெச்சு நம்ம காமெடி பண்ணவேண்டியதுதான் ..... எப்படி லாஜிக் ....

(பி.கு: நம் சேட்டை கமெண்ட் இவர்களை பார்த்து : " என்ன இது சின்ன புள்ள
தனமா இருக்கு ")

1 . " ஜட்ஜ் ஐயா இங்க இருக்கற புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும் தொடர்ந்து பயங்கரமா சண்டை போட்டுகிட்டே இருக்காங்க"
"அட ஏன்யா சுத்தி வளைக்கர வடிவேலு சிங்கமுத்து மாதிரின்னு சொல்லு!.... சரி அப்ப பிரிச்சிட வேண்டியதுதான்"

2 "ஏன்யா பல கோடி ரூபாய்
நில மோசடிங்கரையே அப்படி எந்த நிலத்த ஏமாத்தி உன்கிட்ட வித்தார் ""வடமா'நிலத்த'"

3 . "அண்ணே வடிவேலு-சிங்கமுத்து செந்தில்-கவுண்டமணி ரெண்டு ஜோடிக்கும் உள்ள வித்யாசம் என்ன?
"செந்தில்-கவுண்டமணி - ரெகார்டட் கிரிக்கெட் மேட்ச்வடிவேலு-சிங்கமுத்து -லைவ் கிரிக்கெட் மேட்ச் "

4 . "டேய் வாடா போலிஸ் திருடன் விளையாட்டு விளையாடலாம் "
" போடா அது பழசு வா வடிவேலு-சிங்கமுத்து விளையாட்டு விளையாடலாம்"

5 . "ஏன்யா திருவிழால எப்பவும் வர கோழி சண்டை, ஆடு சண்டைலாம் போரடிக்குது இந்த தடவை வடிவேலு-சிங்கமுத்துவ கூப்பிடலாம்னு நீ சொல்றது கொஞ்சம் ஓவரா இல்ல "

6 . "ஏன்டா அண்ணன் தம்பி ரெண்டு பெரும் இப்படி கீரியும் பாம்புமா அடிச்சிகரீங்களே உங்க வீட்ல கேக்கவே மாட்டாங்களா"
"நாங்க பரவா இல்லை சார் எங்க அம்மா அப்பா வடிவேலு-சிங்கமுத்து மாதிரி அடிச்சிப்பாங்க"

இதை முடிக்கும் பொழுது என் மனதில் தோன்றிய வசனம் .வடிவேலு: " எங்கள வெச்சு காமடி கீமடி பண்ணலியே "

Saturday, April 10, 2010

சம்மர் ஸ்பெஷல்-1 (சூடான ஜோக்ஸ்)


அட வெயில் ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு இதபத்தி சீரியஸா நெறையா பேசியாச்சு இன்னும் என்னத்த சொல்றது.... சரி ....
ஆரம்பிப்போம் நம் சேட்டையை ...."
பி. கு : ஜோக்ஸ படிச்சிட்டு எனக்கு நானே சொல்லி கொண்டது "வெயில் ஜாஸ்தியான இப்படிதான்"

1 ஏன் அண்ணே இப்படி வெளில சுத்துறீங்க .... வெயில் எப்படி அடிக்குதுன்னு பாருங்க "
"அடபோப்பா இது கொஞ்ச நேரம் தான் அடிக்கும் வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொடர்ந்து அடிக்கும்"

2 . "என்னப்பா டீ இவ்வளவு ஆறி பொய் இருக்கு "
" கொஞ்ச நேரம் கைல வெச்சுக்குங்க அதுவே சூடாகிடும்"

3 "பசங்களா கேளுங்க எந்த உணவையுமே காச்சி சூடா வெச்சாத்தான் பேக்டீரியா தங்காது "
" போங்க டீச்சர் அப்படி பார்த்த பூமியே பயங்கர சூடா இருக்கு எல்லா பேக்டிரியாவும் இந்நேரத்துக்கு செத்திருக்கனுமே

4 . "சர்வர் சூடா என்னையா இருக்கு "
"பூமி தான்

5 . "தம்பி, இராமாயணம் இந்த காலத்துல நடந்திருந்தா எப்படி இருந்திருக்கும்"
"ராமர் சீதாவ அக்னி குண்டதுல நடந்துவர சொல்றதுக்கு பதிலா வெயிலில நடந்து வர சொல்லிருப்பார் "

6 "தலைவரே வெயில கொடுமை தாங்க முடியலைதான் அதுக்காக தினமும் ஒரு பிரபலத்த கூப்பிட்டு உங்கள புகழ சொல்லி உச்சி குளிர்றது கொஞ்சம் டூ மச் "

7 "டாக்டர் நீங்க என் புருஷன்கிட்டே வேயில் காலமா இருக்கு நெறைய நீர் ஆகாரமா சாப்பிடுங்கன்னு சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டு உயிரை எடுக்கறாரு "
"ஏன் மா என்ன ஆச்சு
" நீருக்கு சாராயமும் ஆகாரத்துக்கு சைடுடிஷும் கேக்கறாரு

8 . "டேய் மொட்டை மாடில தண்ணி ஊத்துடா கூலா இருக்கும் "
"அடபோங்கப்பா அப்ப பூமி மேல தண்ணி ஊத்த சொல்லுங்க உலகமே கூலா இருக்கும்"
"?!!!?"