Wednesday, March 24, 2010

போலி மருந்து ஜோக்ஸ்


சென்னையில் காலாவதியான போலி மருந்துகளை விற்ற ஆசாமியை போலீஸ் பிடித்தது .... இது செய்தி இதை ஒட்டிய நம் நக்கல் நையாண்டி இதோ

1 . டேய் அந்த கடைக்காரன் போலி மருந்து விககறான்னு நெனைக்கறேன்
"எப்படி சொல்றீங்க "
"மருந்து கேட்டா... உங்களுக்கு பிடிச்ச கலரா நீங்களே செலக்ட் பணிகுங்கனு சொல்றான் "

2 . "நம்ம டாக்டர் இன்னும் பழைய தொழிலை மறக்கல
' எப்படி சொல்ற
" அந்த பேஷன்ட் மருந்து சீட்டு கேட்டா, கிளிய வெச்சு நல்ல சீட்டு எடுத்துக் குடுக்க சொல்றாரு

3 "டாக்டர் இந்த மருந்த சாப்பிட்டா எனக்கு குணமாகிடுமா"
"கவலையே படாதீங்க குணா ஆகிடும் "

4 என்ன டாக்டர் அந்த பேஷன்ட் நீங்க கொடுத்த மருந்து சரி இல்லைனா கன்ஸ்யுமர் கோர்ட் போவேங்கறார் நீங்களும் சரின்னு விடுறீங்க"
"சொர்கத்துலையோ நரகத்துலையோ அந்த வசதி இல்லைங்கற நம்பிக்கைளதான்"

5 . "டாக்டர் ரெண்டு நாளா தலைவலி கொஞ்சம் கொஞ்சமா உயிரை வாங்குது
"கவலபடாதீங்க மருந்து தரேன் மொத்தமா வாங்கிடும்"

6 ." என்ன ஆச்சு நம்ம டாக்டர போலீஸ் பிடிச்சிட்டு போகுது
"ஆமாம் ஸ்பான்சர் கிடைக்குதுனு என்ன மருந்துனு கூட பார்க்காம மருந்த எழுதி கொடித்திருக்கார் "
"அப்படி என்ன மருந்து "
"வெடி மருந்து"


2 comments:

கண்மணி/kanmani said...

nice :)))))))))))

நிகழ்காலத்தில்... said...

\\ ." என்ன ஆச்சு நம்ம டாக்டர போலீஸ் பிடிச்சிட்டு போகுது
"ஆமாம் ஸ்பான்சர் கிடைக்குதுனு என்ன மருந்துனு கூட பார்க்காம மருந்த எழுதி கொடித்திருக்கார் "

"அப்படி என்ன மருந்து "

"வெடி மருந்து"\\

சிரிப்பை அடக்க முடியவில்லை :)))

Post a Comment